×

புதுவையில் புதிதாக 32 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, ஜன. 27: புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்
கு றிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 3,276 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 12, காரைக்கால்- 3, மாகே- 15 என மொத்தம் 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் பாதிப்பு இல்லை. உயிரிழப்புகளும் இல்லை. 17 பேர் குணமாகி சென்றுள்ளனர். தற்போது 295 கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் 109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 186 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 38,910 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,newcomers ,Puduvayal ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...