×

2 பேர் கைது மணல் கடத்திய 2 மினி லாரி பறிமுதல்

அறந்தாங்கி, ஜன. 27: ஆவுடையார்கோவில் அருகே மணல் கடத்திய 2 மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. ஆவுடையார்கோவில் அடுத்த வீரமங்கலம் பகுதி வெள்ளாற்றில் இருந்து சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ பாஸ்கரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தபோது வெள்ளாற்று பாலம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி கொண்டிருந்த சின்னச்செங்கீரையை சேர்ந்த சித்திரைவேலுக்கு சொந்தமான மினி லாரியை 2 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்தனர். ஆவுடையார்கோவில் அடுத்த மீமிசல் எஸ்ஐ துரைசிங்கம், தனிகொண்டான் பிரிவு சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மீமிசலை சேர்ந்த மதன் என்பவரது மினி லாரியை பறிமுதல் செய்தார். அதேபோல் நாகுடி எஸ்ஐ ராஜேந்திரன், கம்பச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.அப்போது கம்பச்சேரி கண்மாயில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்தார். அறந்தாங்கி எஸ்ஐ சிவக்குமார், அழியாநிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வெள்ளாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது