×

சேரன்மகாதேவில் எஸ்டிபிஐ பேரணி

வீரவநல்லூர், ஜன. 27:  வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேரன்மகாதேவியில் எஸ்டிபிஐ சார்பில் தடையை மீறி பேரணி நடந்தது.
 தொகுதி செயலாளர் பத்தமடை ஜெய்லானி தலைமையில் துணைத் தலைவர் முல்லை மஜித், மாவட்டச் செயலாளர் கல்லிடை சுலைமான், அமைப்புச்  செயலாளர் ரத்திஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால் மைதின், விம்ன்ஸ் இந்தியா  முவ்மெண்ட் மாவட்டச் செயலர் நூஸ்ரத், துணைத் தலைவர் பீர்பாத், செயற்குழு  உறுப்பினர் பாத்திமா முன்னிலையில் நடந்த இப்பேரணியை  மாவட்டத் தலைவர் பீர் மஸ்தான் துவக்கிவைத்தார். மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா சிறப்புரையாற்றினார். பழைய பஸ் நிலையத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்த இப்பேரணியில் பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொகுதி இணைச் செயலாளர் செய்யது நன்றி கூறினார்.

Tags : STBI ,rally ,Cheranmagade ,
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி