×

பொதுத்துறையை பாதுகாக்க சிறப்பு கூட்டம்

சிவகங்கை, ஜன.27: சிவகங்கையில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் பொதுத்துறையை பாதுகாக்கும் சிறப்பு கூட்டம் நடந்தது. இந்திய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிற எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியார் பங்கு சந்தையில் முதலீடு செய்ய முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறையை பாதுகாக்கும் வகையில் இக்கூட்டம் நடந்தது. கிளைத் தலைவர் செந்தில்பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரங்கநாதன், நாகராஜன், நாகராஜ், செல்வராஜ், முகமதுஅன்சாரி முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் வைரமுத்து, மத்திய மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலாளர் உமாநாத், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, கிளை செயலாளர் ரெங்கநாதபாபு ஆகியோர் பேசினர். மதுரை கோட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் சிறப்புரையாற்றினார். செயலாளர் சைமன் நன்றி கூறினார்.

Tags : meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்