×

கோவில்பட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தமிழகத்தை பாதுகாக்க ஆட்சி மாற்றம் வேண்டும் கீதாஜீவன் எம்எல்ஏ பேச்சு ஆறுமுகநேரியில் பெண்களுக்கு சேலை வழங்கல்

ஆறுமுகநேரி, ஜன.27: ஆறுமுகநேரி அரசு மகளிர்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவில் ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.     ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளியில் குடியரசு தினவிழா நடந்தது. திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தேசிய கொடியேற்றினார்.  தலைமைஆசிரியை (பொறுப்பு) தேவமலர் வரவேற்றார். விழாவில் ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் ஏழை பெண்களுக்கு இலவச சேலைகளை ஏஎஸ்பியின் மனைவி முக்குலேகா ஹர்ஷ்சிங் வழங்கினார்.  நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செல்வி, ஆதவா தொண்டு நிறுவன நிறுவனர் பாலகுமரேசன், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags : meeting ,Weerawansa Day ,Kovilpatti ,women ,Tamil Nadu ,Geethajeevan MLA ,speech ,Arumuganeri ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!