சாத்தான்குளம், ஜன. 27: முதலூர் பகுதியில் அடையல் ராஜரத்தினம்நாடார் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் 41 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதலூர் ஊராட்சித் தலைவர் பொன்முருகேசன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர் முத்துவேல், முன்னாள் அரிமா சங்க தலைவர் சுந்தர், முன்னாள் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் யோகபாண்டியன், முதலூர் மோசஸ்,முருகன், ஆனந்த், பொன்திரவியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கண்காணிப்பு கேமரா இயக்கும் பணியை எஸ்பி ஜெயக்குமார் ஜன. 31ம்தேதி தொடங்கி வைக்கிறார்.