×

திமுக செய்வதைத்தான் சொல்லும் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேட்டி

மதுரை, ஜன. 27: மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் முனிச்சாலையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் முகேஷ்சர்மா தலைமை வகித்தார். மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பொன்.முத்துராமலிங்கம் வரவேற்றார். தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி பேசுகையில், ‘நம் மொழிக்கு, பண்பாட்டுக்கு, தமிழ் இனத்துக்கு, மாநில உரிமைகளுக்கு எதிராக இருக்கிற பாஜ அரசை எதிர்த்து அழிக்க, தமிழகத்தில் நடக்கிற அதிமுக அரசை ஒழித்து நல்லாட்சி அமைந்திட தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும்’ என்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ என்னும் தேர்தல் பிரசாரத்தை துவக்கவுள்ளார். அவர் நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து ஆட்சி அமைந்ததும் இக்குறைகளை நிவர்த்தி செய்ய தனித்துறையை உருவாக்கி, 100 நாட்களில் அதை சரி செய்வதாக கூறியுள்ளார்.  திமுக செய்வததைத்தான் சொல்லும்’ என்றார். கூட்டத்தில் வேலுசாமி, குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, பழனிசாமி, தமிழரசி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Tamilachchi Thangapandian ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி