×

பைக் மீது வேன் மோதி தந்தை பலி மகன் படுகாயம்

ெசய்யாறு, ஜன.27: ெசய்யாறு அடுத்த சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமூர்த்தி(70). இவர் புதிய வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களை வாங்க நேற்று முன்தினம் தனது மகன் நடராஜனுடன்(44) பைக்கில் செய்யாறு சென்றார். பெரும்பாலை கிராமம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது எதிரே வந்த வேன், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நடராஜன் படுகாயமடைந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் படுகாயமடைந்த நடராஜனை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜமூர்த்தியின் உறவினர் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...