×

தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

பண்ருட்டி, ஜன. 12: பண்ருட்டியை சுற்றியுள்ள வன பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. நேற்று காலை தண்ணீர் தேடி சுமார் 2 வயது உள்ள பெண் புள்ளிமான் கெடிலம் ஆற்றின் வழியாகவே வந்துள்ளது. அப்போது நாய்கள்AA துரத்தியதால் பயந்துபோன மான், பண்ருட்டி டைவர்ஷன் ரோடு அருகே உள்ள கார் பார்க்கிங்குக்கு வந்தது.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அந்த மானை பத்திரமாக மீட்டு கடலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கடலூர் வனச்சரக அலுவலர் உத்தரவின்பேரில் வனத்துறையினர் சென்று அந்த மானை மீட்டு பண்ருட்டி காப்புக்காடு பகுதியில் விட்டனர். தற்போது கோடைகாலம் துவங்கி விட்டதால் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன், தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று பண்ருட்டி ரயில் நிலையம் அருகே அம்பேத்கர் நகருக்குள் நுழைந்தது. வனத்துறையினர் உடனடியாக தனி கவனம் செலுத்தி வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Panruti ,Kedilam river ,
× RELATED ஓட்டலில் மனித கறி கேட்டு தகராறு சமையல் மாஸ்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு