×

இடத்தகராறில் தந்தை, மகனுக்கு கத்திக்குத்து பைனான்சியர் கைது

திருச்சி, ஜன.26: திருச்சி பாலக்கரை பருப்புகாரத்தெரு அந்தோணியார் கோயில் ெதருவை சேர்ந்தவர் அண்ணாமலை(70), பைனான்சியர். எதிர் வீட்டில் வசிப்பவர் மணிவண்ணன்(50). இருவருக்கும் இடத்தகராறால் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் முன்விரோதம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அண்ணாமலை, காய்கறி வியாபாரிகள் 2 பேருடன் வந்து மணிவண்ணனின் வீட்டுக்குள் புகுந்து அவரை இழுத்து வந்து கத்தியால் குத்தினார். இதில் மணிவண்ணனுக்கு குடல் சரிந்தது. இதை தட்டிக்கேட்ட அவரது மகன் பிரவீனையும் கத்தியால் குத்தினர். தகவலறிந்த பாலக்கரை போலீசார் படுகாயமடைந்த தந்தை, மகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து அண்ணாமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Financier ,
× RELATED பைனான்சியரிடம் மிரட்டி ₹50 ஆயிரம் பறிப்பு மேலும் 2 பேர் கைது வேலூரில்