×

கல்வியாளர்கள் கோரிக்கை குடியரசு தின விழாவை முன்னிட்டு புதுகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

புதுக்கோட்டை, ஜன.26: புதுக்கோட்டையில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பாதுகாப்பை போலீசார் பலப்படுத்தியுள்ளனர். நாடுமுழுவதும் இன்று (26ம் தேதி) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் புதுக்கோட்டை ஆயுதப்படை மாதனத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலெக்டர் உமாககேஸ்வரி, எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் போலீஸ் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : academics ,celebrations ,Republic Day ,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!