அறந்தாங்கி, ஜன.26: அறந்தாங்கி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு அழியாநிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அழியாநிலை மின்வாரிய அலுவலகம் அருகே அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வெள்ளாற்றில் இருந்து அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த அழியாநிலை பஞ்சுமில் குடியிருப்பை சேர்ந்த பாண்டி (22), அழியாநிலை வாழக்குடியிருப்பை சேர்ந்த சிவமணி (33) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.