×

கடையில் கோழிகளை தவிர்த்து இரும்பு கூண்டை மட்டும் திருட முயன்ற வாலிபர்-சிசிடிவி கேமராவில் பதிவு

தாராபுரம் : தாராபுரம் உடுமலை சாலையில் தனியார் சிக்கன் கடை உள்ளது. கடையின் உரிமையாளர் சிவகுமார் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு இரண்டு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுக் கோழிகள் மற்றும் பிராய்லர் கோழிகளின் கூண்டுகளையும் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.வழக்கம்போல் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்த போது கடையின் முன்புற பூட்டு உடைந்து கிடந்தது. உள்புறம் காலியாக கிடந்த கோழிகூண்டு மட்டும் கீழே கவிழ்ந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது அதிகாலை 2 மணிக்கு கோழி கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் காலியாக இருந்த இரும்புக் கூண்டை மட்டும் திருடிச் செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது தெரிய வந்தது. இரும்புக் குண்டின் எடை  அதிகமாக இருந்ததால் அதை எடுத்துச் செல்ல முடியாமல் திணறிய திருடன் அருகில் கோழிகள் அடைக்கப்பட்டிருந்தாலும் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு காலிக் கூண்டை மட்டும் திருடி செல்வதில் குறியாய் இருந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. ஆனால் கூண்டை திருட முடியாததால் வாலிபர் திரும்பிச் சென்ற சம்பவம் சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகியிருந்தது. இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் சம்பவயிடம் வந்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி காட்சியில் உள்ள திருடன் வேறு ஏதாவது சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா எனவும் விசாரிக்கின்றனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி காட்சியில் தெரிந்த உருவ அமைப்புடன் சென்ற ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post கடையில் கோழிகளை தவிர்த்து இரும்பு கூண்டை மட்டும் திருட முயன்ற வாலிபர்-சிசிடிவி கேமராவில் பதிவு appeared first on Dinakaran.

Tags : Valiber ,Tarapuram ,Udumalai Road ,Sivakamar ,Walliber ,Dinakaran ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது