×

காரியாபட்டியில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

காரியாபட்டி, ஜன. 26: காரியாபட்டியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணியை தாசில்தார் தனக்குமார் துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேனரில் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய பேரணி முக்குரோடு வழியாக காரியாபட்டி பஸ்நிலையம் வந்தடைந்தது.

பேரணியில் பங்கேற்ற  பள்ளி மாணவ, மாணவியர், `ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்களிப்போம்’ என பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தியும், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags : Voter Day Awareness Rally ,
× RELATED சிறுவன் உள்பட 30 பேர் காயம்...