×

திருவில்லிபுத்தூரில் வாலிபால் போட்டி மம்சாபுரம் அணி வெற்றி

திருவில்லிபுத்தூர், ஜன. 26: திருவில்லிபுத்தூரில் நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்றது. திருவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த மூன்று தினங்களாக மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும், தனியார் கிளப் அணிகளும் கலந்து கொண்டன.
இறுதி போட்டியில் மம்சாபுரம் அணியும், ராஜபாளையம் அணியும் மோதின. இதில் மம்சாபுரம் அணி வெற்றி பெற்றது.

இரண்டாம் இடத்தை ராஜபாளையம் அணி, மூன்றாம் இடத்தை விளாம்பட்டி அணியும், நான்காம் இடத்தை ஜிஎஸ் இந்து மேல்நிலை பள்ளி அணியும் பிடித்தன. பரிசளிப்பு விழா பள்ளி மைதானத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி செயலாளர் கிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கண்ணன், வாலிபால் கழக தலைவர் துரைசிங், சேர்மன் ரங்கராஜன், முன்னாள் தலைமையாசிரியர் வெங்கடாசலம், தலைமை பயிற்சியாளர் பொன்னியின் செல்வன் ஆகியோர் பரிசு வழங்கினர். முதல்பரிசாக மம்சாபுரம் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் வருண்குமார் மற்றும் தங்கவேல், முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags : team ,volleyball match ,Srivilliputhur ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா