×

மானிய விலை சிமென்ட் கிடைப்பதில் சிக்கல் பாதியில் நிற்கும் கட்டிட பணிகள்

உத்தமபாளையம், ஜன.26: உத்தமபாளையம் பகுதியில் அம்மா சிமென்ட் கிடைக்காமல் கட்டிட வேலைகளை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. உத்தமபாளையத்தில், அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தாலுகா அளவில். உத்தமபாளையம். உ.அம்மாபட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், வீடுகள் கட்டும் போது மானிய விலையில் அம்மா சிமென்ட் வாங்கி செல்கின்றனர். இந்த சிமென்ட் ஒரு மூடை ரூ.216 என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 3 மாதமாக நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, மானிய விலையில், வரக்கூடிய அம்மா சிமென்ட் வருவதில்லை.

இதனால் கட்டிடப் பணிகள் பாதியில் நிற்கின்றன. மிகவும் கஷ்டப் படக்கூடிய, குடும்பங்கள் தினந்தோறும் உத்தமபாளையத்தில் உள்ள குடோனுக்கு வந்து, தங்களுக்கு சிமென்ட் வந்துவிட்டதா என கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் வெளி மார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை நிலவுகிறது. இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலாக அம்மா சிமென்ட் சப்ளை இல்லை என கைவிரிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் தற்போது அம்மா சிமென்ட் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : middle ,
× RELATED உதயமார்த்தாண்டபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி