×

புத்தாக்க பயிற்சியில் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு பாராட்டு

தொண்டி, ஜன.26:  தொடக்க நிலை கல்வி ஆசிரியர்களுக்கு புதுமையான கல்வி திட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான புத்தாக்க பயிற்சியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கினைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டியுடன் இணைந்து புதுமையான கல்வி திட்ட செயல்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான புத்தாக்க பயிற்சி 15 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

பயிற்சியை கருத்தாளுனர் மகேஸ்பாலன் வழங்கினார். புதிய கற்பித்தல் யுத்திகளை வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்திய முர்த்தி தலைமை வகித்தார். இணைய வழி பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுககு வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, இடைநிலை ஆசிரியை சுபஸ்ரீ ஆகியோர் பாராட்டு சான்றிதழ் பெற்றனர். மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, உதவி திட்ட அலுவலர் ஆரோக்கிய சாமி, உதவி திட்ட அலுவலர் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், நாகராஜன், பாஸ்கரன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : teachers ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...