×

விடுதிகளில் சமையலர் காலிப்பணியிட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு

மதுரை, ஜன. 26:   மதுரையைச் சேர்ந்த சக்திவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை   மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கீழ் செயல்படும் விடுதிகளில்   காலியாக இருக்கும் 43 சமையலர் பணியிடங்களை நிரப்ப, கடந்தாண்டு ஆக.28ல் அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கு, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தோரும், மதுரை மாவட்டத்தில் குடியிருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆனால், விதியை மீறி வௌிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடமும் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்து, முறையாக அறிவிப்பு வெளியிட்டு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் மற்றும் மதுரை கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளிவைத்தனர்.

Tags : cancellation ,hotels ,
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...