×

மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி

நத்தம், ஜன. 26: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே பழைய பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (20). லாரி டிரைவர். இவர் நத்தம் அருகே திருமலைக்கேணி அம்மாபட்டியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக டூவீலரில் வந்தார். திருமணம் முடிந்து ஊருக்கு திரும்பிய போது மணக்காட்டூர் அருகே டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பழனிசாமிக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ