கோவை, ஜன. 26: கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மற்றும் சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சின்னியம்பாளையம் அண்ணா திடலில் மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் ஒன்றிய பொறுப்பாளர் சன்.ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபு வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், ஆம்பூர் பொய்யாமொழி, குடியாத்தம் புவியரசி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.