×

காதலித்த பெண் கிடைக்காததால் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை

அந்தியூர், ஜன. 26: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (27). தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது உறவினர் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்நிலையில் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்காக ஜாதகம் பார்க்க சென்றனர். அப்போது, பொருத்தம் இல்லாததால் இருவீட்டாரும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த மயில்சாமி நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள 90 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை