திருச்செங்கோடு, ஜன.26: திருச்செங்கோடு உழவர் சந்தை எதிரில், அர்த்தநாரீஸ்வரர் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழா நடந்தது. நிறுவனர் அஸ்வின் வரவேற்றார். திருச்செங்கோடு வித்யா விகாஸ் பள்ளிகளின் தாளாளர் சிங்காரவேல், நகராட்சி ஆணையாளர் சையத் முஸ்தபா கமால், அரசுப் பள்ளி தலைமை, ஆசிரியர் செந்தில்குமார், மாணிக்கம்பாளையம் முதுகலைத் தமிழ் ஆசிரியர் ராமு ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அகாடமியைத் துவக்கி வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். இதில், தேமுதிக நிர்வாகி விஜய்சரவணன், ஆறுமுகம், அஜித்குமார், விஷ்ணு டிரேடர்ஸ் முத்து, பயிற்சியாளர் செல்வராஜ், கார்த்தி ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு போட்டித் தேர்வு எழுத விரும்பும் மாணவ, மாணவியருக்கு சிறப்பாக பயிற்சி அளித்து, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வைப்பதே எங்கள் நோக்கம் என்று நிறுவனர் அஸ்வின் குறினார். ...