×

எருமப்பட்டி அருகே முன்னாள் மாணவர்கள்

சந்திப்பு கூட்டம்சேந்தமங்கலம், ஜன.26:  எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சி சௌடேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில், பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். இப்பள்ளியில் 1994-95 ஆண்டு 10ம் வகுப்பு படித்த 30 மாணவர்கள் கலந்துகொண்டு, தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தற்போது தங்கள் செய்துவரும் தொழில்களைப் பற்றி கேட்டறிந்தனர். இதையடுத்து தாங்கள் படித்த பள்ளிக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்தனர்து. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் கோபிநாத், தனசேகரன், ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Alumni ,Erumappatti ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...