×

மாணவி கடத்தல்

தர்மபுரி, ஜன.26: பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த 16வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 23ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் பென்னாகரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதில், தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த செல்லக்கண்ணு(23) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளார். இதன்பேரில், பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா