×

விபத்தில் விவசாயி பலி

சங்கரன்கோவில், ஜன. 26:  சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தைச் சேர்ந்தவர் மருதையா (70). விவசாயியான இவர் நேற்று காலை தனது தோட்டத்திற்கு சைக்கிளில் நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். தனியார் தொழில் கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த தனியார் பஸ் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கிய மருதையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த பனவடலிசத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...