×

திருச்செந்தூரில் வேலை வாய்ப்பு முகாம்

திருச்செந்தூர், ஜன.26: திருச்செந்தூர் செந்தூர் நண்பர்கள் நலஅறக்கட்டளை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். அறக்கட்டளை வைத்தியநாதன், அனந்தராமன், டிசிடபிள்யூ மந்திரமூர்த்தி முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொருளாளர் கார்க்கி வரவேற்றார். முகாமை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்ரவி, தொழிலதிபர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் துவங்கி வைத்தனர். இதில் 27 தனியார் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். மொத்தம் 4 ஆயிரம் நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 1300 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நிறைவு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கிருபாகரன் தொகுத்து வழங்கினார். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், டிசிடபிள்யூ உதவி தலைவர் சீனிவாசன் ஆகியோர் பணி நியமன ஆணையை வழங்கினர்.
இதில் வேல்ராமகிருஷ்ணன் மற்றும் செந்தூர் நண்பர்கள் நல அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Job placement camp ,Thiruchendur ,
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...