×

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

விழுப்புரம், ஜன. 24:  விழுப்புரம் அடுத்த முத்தம்பாளையம் முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி புவனேஸ்வரி (59). இவர் கணவனை இழுந்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த 21ஆம் தேதி வீட்டில் இரவு தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்த்தபோது யாரோ மர்மநபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அலமாரியில் வைத்திருந்த தாலி தங்க காசு உள்ளிட்ட 16 கிராம் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து புவனேஸ்வரி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : jewelery ,
× RELATED விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி...