×

சிவத்தையாபுரம் கோயில்களில் வருஷாபிஷேக விழா

ஏரல், ஜன. 24: சாயர்புரம் அருகேயுள்ள சிவத்தையாபுரம் ஆனந்தவிநாயகர் கோயில், மன் நாராயண சுவாமி கோயில், ம் வித்யா கணபதி கோயில் மற்றும் முத்துமாலை அம்மன் கோயில்களில் வருஷாபிஷேக விழா நடந்தது.
இதனை முன்னிட்டு ஆனந்தவிநாயகர், ம் வித்யா கணபதி கோயில்களில் காலை கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை பூஜை நடந்தது. தொடர்ந்து மன் நாராயண சுவாமி கோயிலில் கும்ப பூஜை, தேவதா ஹோமம், மஹா அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து முத்துமாலை அம்மன் கோயிலில் கும்ப பூஜை நடத்தப்பட்டு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வருஷாபிஷேக நிகழ்ச்சியினை தூத்துக்குடி சிவன் கோயில் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியர் நடத்தினார். ஏற்பாடுகளை சிவத்தையாபுரம் ஊர் தர்மகர்த்தா அச்சுதன் செய்திருந்தார்.

Tags : festival ,Sivathaiyapuram temples ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...