ஏரல், ஜன. 24: சாயர்புரம் தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் இவாஞ்சலின் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று 129 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஞானராஜ், உதவி தலைமை ஆசிரியை கமலி, வை. கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகேசன், யூனியன் துணைத்தலைவர் விஜயன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எப்றாயீம், சாயர்புரம் நகர துணை செயலாளர் துரைச்சாமி ராஜா, வை. ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர், மாவட்ட விவசாய பிரிவு துணைத்தலைவர் பால்துரை, பண்ணைவிளை தக்கர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரவிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.