×

தேனியில் மத்திய அரசை கண்டித்து தர்ணா

தேனி, ஜன. 24: தேனியில் நேரு சிலை அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட ஏஐடியுசி செயலாளர் ராஜ்குமார் தலைமை வகிக்க, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ரவிமுருகன், சிஐடியு ஊரக மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் 3 வேளாண் சட்டங்களை உடனே வாபஸ் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, எல்பிஎப் மாவட்ட பொருளாளர் முருகன், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, சிஐடியு கட்டுமான மாவட்ட செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

Tags : Dharna ,government ,Theni ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளால் பஸ்,...