×

வத்தலக்குண்டு பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பில் நெகிழ்ச்சி

வத்தலக்குண்டு, ஜன. 24: வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2015ம் ஆண்டு பிளஸ் 2 முடித்த 45 மாணவிகள் நேற்று பள்ளியில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினர். தலைமையாசிரியை எலிசபெத் பாத்திமா தலைமை வகிக்க, பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவிகள் சுருதி, ஆர்த்தி உள்பட பலர் பேசினர். விழாவில் மாணவிகள் தங்களின் பழைய நினைவுகள், தங்களது வாழ்க்கை நிகழ்வுகளை பேசி மகிழ்ந்தனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி ஆசி பெற்றனர். பின்னர் அனைவரும் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.

Tags : meeting alumni ,Wattalakundu School ,
× RELATED வத்தலக்குண்டு பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு