×

பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

புவனேஸ்வர்: இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவைகள் டிஆர்டிஓவால் சோதனை செய்யப்பட்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கிடையே, போர்க்கள பயன்பாட்டிற்காக பிரளய் என்ற குறுகிய தூர ஏவுகணை உள்நாட்டிலேயே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் உயர் துல்லியம் மற்றும் அதிநவீன வழிகாட்டுதல் அமைப்புகளுக்கு பெயர் பெற்ற, ஒரு திடமான உந்துசக்தி கொண்ட ஏவுகணையாகும்.

பல்வேறு வகையான ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடியது. இந்த ஏவுகணை 150 முதல் 500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும். இந்நிலையில், ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து டிஆர்டிஓ 2 பிரளய் ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி சோதித்தது. இரண்டும் திட்டமிடப்பட்ட பாதையை பின்பற்றி அனைத்து இலக்குகளையும் துல்லியமாக அடைந்தன. இந்த வெற்றி ஏவுகணையின் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளது என ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Defence Minister ,Rajnath Singh ,Bhubaneswar ,TRTO ,Indian Army ,DRTO ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை