×

சாலையில் கூடுதலாக தெருவிளக்கு வசதி செய்து தர வேண்டும்

கரூர், ஜன. 24: கரூர் திருமாநிலையூர் சுக்காலியூர் பிரதான சாலையில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில் இருந்து செல்லாண்டிபாளையம் வழியாக சுக்காலியூர் மற்றும் மதுரை, சேலம் பைபாஸ் சாலைகளை அடையும் வகையில் பிரதான சாலை அமைக்கப்பட்டுள்ளது. கரூர் நகரப்பகுதிகளில் இருந்து பைபாஸ் சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையின் வழியாக செல்கின்றன. இந்நிலையில், இந்த சாலையில் குறிப்பிட்ட து£ரம் தெரு விளக்குகள் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலையில் தேவையான இடங்களில் கூடுதல் தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி