×

மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு பூட்டு

கோவை, ஜன. 22:  கோவை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களிலும், மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள வணிக வளாகங்களில் கட்டப்பட்டுள்ள கடைகள், தனியாருக்கு மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், நீண்ட மாதங்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 அதன்படி, கடந்த வாரங்களில் 6 மாதங்களுக்கு மேல் வாடகை நிலுவை வைத்துள்ள 15 கடைகளுக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டில் 7 காய்கறி கடைகள் மற்றும் கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியில் 2 கறிக்கடைகள் என 9 கடைகள், 6 மாதங்களுக்கு மேலாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி, மேற்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில் அரசன் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் மேனகா குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் வாடகை செலுத்தாத 9 கடைகளையும் பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags : stores ,corporation ,
× RELATED குட்கா விற்பனை செய்த 3 மளிகை கடைகளுக்கு சீல்