பாபநாசம், ஜன. 22: பாட்டாளி மக்கள் கட்சியின் உழவர் பேரியக்க நகர ஆலோசனை கூட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். பாமக நகர தலைவர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஒன்றியத் தலைவர் அறிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் முரளிதரன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, பேச்சாளர் தமிழ்ச் செல்வன், மாநில துணை செயலாளர் கலிய மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கும்பகோணம், தஞ்சாவூர் நெடுஞ்சாலையை முழுவதும் தரமாக புதிதாகப் போட வேண்டும். பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.32 ஆயிரத்து 500 அரசு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.