×

திருவரங்குளம் பகுதியில் குறுகியகால நெல் ரகங்கள் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஜன. 22: திருவரங்குளம் பகுதியில் குறுகியகால நெல் ரகங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக பல நூறு ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த நெல், கடலை, உளுந்து பயிறு மழைநீரில் மூழ்கி பல லட்ச ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது விவசாயிகள் தங்களது வயல்களில் பாசன குளங்களில் நிரம்பிய தண்ணீரை பயன்படுத்தி குறுகியகால பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகையில் வேளாண்த்துறை சார்பில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம் நண்பன் உள்ளிட்ட வேளாண்மைத்துறை கிடங்குகளில் குறுகியகால நெல் ரகங்களை போதிய அளவில் கையிருப்பில் இல்லை. எனவே உடனடியாக குறுகியகால நெல் ரகங்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Thiruvarangulam ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...