×

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்கள், 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

அவனியாபுரம், ஜன.22: மதுரை அவனியாபுரத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தென்கிழக்கு மண்டல பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது கருத்துரை வழங்கினார். பொருளாளர் சபீபுல்லாகான், துணை பொதுச்செயலாளர் முகம்மது கவுஸ், அமைப்புச் செயலாளர் உசேன் கனி, தமுமுக மாநில செயலாளர்கள் தொண்டி சாதிக், சிவகாசி முஸ்தபா கலந்து கொண்டனர். மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன் வரவேற்றார்.

தெற்கு மாவட்ட செயலாளர் சேக் இப்ராகிம் நன்றி கூறினார். ஆயிரத்திற்கும் அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரசியல் விழிப்புணர்வு இளைஞரணி பேரணி நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் புழல் சேக், தொண்டரணி மாநில செயலாளர் கோவை சர்புதீன், துணை செயலாளர் பைஸ் கலந்து கொண்டனர். ரத்ததான முகாமை மாநில மருத்துவ அணி செயலாளர் கிதிர் ஒருங்கிணைத்தார்.

கூட்டத்தில், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும்,  நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் முன்விடுதலை வழங்க வேண்டும். மதுரை உள்ளிட்ட இடங்களில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தலைமை நிர்வாக அலுவலரை உடனடியாக நியமித்து, ஆய்வுக்கூட்டம் நடத்தி, முறைகேடுகள் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Muslims ,Tamils ,Humanitarian People's Party ,
× RELATED நோன்பு கஞ்சி குடித்தபோது பல்செட்டை...