×

தைப்பூச திருவிழா எதிரொலி: பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநி, ஜன. 22: பழநி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் இன்று (வெள்ளி) கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பழநி வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதிகளில் உள்ள கடைகள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளன. ஏராளமான தற்காலிக கடைகள் நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் பக்தர்கள் சாலைகளில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, பழநி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி பழநி நகராட்சி சார்பில் சன்னதி வீதிகளில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள், நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பல கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Tags : Palani ,
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது