×

நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜன. 22: பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 11 மாதகாலமாக சம்பளம் வழங்கப்படவில்ைல. அவர்கள் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு சம்பளம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிர்வாகம் லாபகரத்தில் இயங்க தொடங்கிய நிலையில் டிசம்பர் மாத சம்பளம் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் டிசம்வர் மாத சம்பளத்தை உடனே வழங்கவேண்டும். ஜனவரி மாத சம்பளத்தை உரிய தேதியில் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கோர்ட் ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவி தலைவர் செல்லதுரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ராஜூ, பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Tags : BSNL ,Nagercoil ,
× RELATED பந்தலூரில் பிஎஸ்என்எல் சேவை குறைபாடு