×

தெய்வச்செயல்புரம் அருகே புதுப்பட்டி முத்தாரம்மன் கோயிலில் பிப்.1ல் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி, ஜன.22: புதுப்பட்டி முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேக விழா பிப்.1ம்தேதி நடக்கிறது. தெய்வச்செயல்புரம் அருகே புதுப்பட்டி உச்சினிமாகாளி அம்மன், மாரியம்மன், சந்தனமாரியம்மன், முத்தாரம்மன் மற்றும் கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா பிப்ரவரி  1ம் தேதி நடக்கிறது.  காலை 8மணிக்கு, சங்கர விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் வருஷாபிஷேக விழா தொடங்குகிறது. தொடர்ந்து, உச்சினி மாகாளி அம்மன் கோவிலில் யாகசாலை கும்ப பூஜைகளும், தொடர்ந்து அனைத்து கோவில்களிலும் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் அபிஷேகம்  நடக்கிறது. தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலில் உருவம் பிடித்தலும், கோபுர அபிஷேக தீர்த்தமும்,உச்சினிமாகாளி அம்மன் மற்றும் தேவதைகளுக்கு அபிஷேகமும், அலங்காரத்துடன் கூடிய பூஜைகளும் நடக்கிறது. சிறப்பு வழிபாடுகளைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.  இரவு 7மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்தும், தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றி வழிபடவும் வேண்டும் என்று விழாக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். ஏற்பாடுகளை தர்மகர்த்தா முத்தையாபிள்ளை மற்றும் நயினார், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : celebrations ,Deivacheelpuram ,Pudupatti Mutharamman Temple ,
× RELATED 2024 புத்தாண்டு தின கொண்டாட்டம்...