×

தூத்துக்குடி அருகே பரபரப்பு பேரூரணி சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி

புதுக்கோட்டை, ஜன.22:தூத்துக்குடி அருகே பேரூரணி சிறையில் கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விளாத்திகுளம் அருகேயுள்ள ெரகுராமபுரத்தைச் சேர்ந்த ராஜி மகன் கணேஷ் பாண்டியன்  (23). இவர் பெண் கடத்தல், கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்ட பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை 7.45 மணியளவில் பாத்ரூம் அருகே உள்ள டியூப் லைட்டை உடைத்து கழுத்தில் குத்தி காயம் ஏற்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்த சிறைத்துறையினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தட்டப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சிறைக்குள் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : suicide ,prisoner ,riot prison ,Thoothukudi ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை