சென்னை: அரசுப் பேருந்துகள் பராமரிப்பு, செயல்திறனை கண்காணிக்க போக்குவரத்துத் துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை ஓட்டுநர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மழை காலத்தில் முன் செல்லும் வாகனத்திற்கும் பேருந்துக்கும் இடையே போதிய இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை வலியுறுத்தியுள்ளது.
