×

மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.21: நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவச லேப்டாப் வழங்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18ம் கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 3 ஆண்டுக்கு மேல் ஆகியும் லேப்டாப் வழங்கவில்லை. தற்போது 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் உடனடியாக லேப்டாப் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வழியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்த்தி, தங்கராஜ், கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Student Union Demonstration ,
× RELATED மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்