×

சுவர் இடிந்து பலியான மூதாட்டி குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம்

சேதுபாவாசத்திரம், ஜன.21: சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த கன மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி பல்வேறு இடங்களில் தண்ணீர் ஊருக்குள் புக தொடங்கியது. இதனால் வடிகால் வசதியின்றி வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு ஊமத்தநாடு ஊராட்சி கைவனவயலில் மாரிமுத்து மனைவி துளசியம்மாள்(75) தனது கூரை வீட்டின் சுவர் ஓரத்தில் படுந்திருந்தபோது, 8 மணியளவில வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே துளசியம்மாள் பலியானார். இந்நிலையில் அவரது குடும்பத்திற்கு நேற்று எம்.பி வைத்திலிங்கம் மற்றும் தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் பேரிடர் நிதி ரூ.4 லட்சத்திற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராசு, ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், அருணாசலம், இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...