×

மழையால் நெற்பயிர் பாதிப்பு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை,ஜன.21: தஞ்சை ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் வீரமோகன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் துரைமாணிக்கம் நிறைவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பயிர் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்மழையால் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்ப்பட்டன.இதில், சிபிஐ வடக்கு மாவட்ட நிர்வாகி தர்மராஜ், மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்