×

கஞ்சா விற்க முயன்றவர் மீது வழக்கு அரை கிலோ பறிமுதல்

கரூர், ஜன. 21: கரூர் அருகே கஞ்சா விற்பனை செய்ய முயன்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் திருமாநிலையூர் பகுதியை ஒட்டியுள்ள அமராவதி பாலத்தின் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பசுபதிபாளையம் போலீசார்களுக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரைகிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து லட்சுமணன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : sale ,
× RELATED ரூ.1 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்