×

கலைஞர்கல்வி அறக்கட்டளை சார்பில் மங்களாபுரம் மருதம் பயிற்சி மைய மாணவர்களுக்கு போட்டித் தேர்வு கையேடு

தென்காசி, ஜன.21:  டிஎன்பிஎஸ்சி, ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் கிராமப்புற ஏழை  மாணவ, மாணவிகளை பங்கேற்கச் செய்து வெற்றிபெற ஏதுவாக தென்காசி மாவட்டம், மங்களாபுரத்தில் மருதம் இலவச போட்டித்  தேர்வு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மாணவ, மாணவிகள் சுமார் 130 பேர் போட்டித் தேர்வுகளுக்கு பயின்று வருகின்றனர். இதையடுத்து போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள ஏதுவாக 2021ம் ஆண்டுக்கான மாதிரி கையேடுகளை கலைஞர் கல்வி அறக்கட்டளை சார்பில்  வழங்கும் விழா நடந்தது. மருதம் இலவச போட்டித் தேர்வு பயிற்சிமையத்தில் நடந்த இவ்விழாவிற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் துணைத்லைவர் ராம்மோகன் தலைமை வகித்தார். தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பாக்யராஜ் வரவேற்றார்.  திமுக பொதுக்குழு உறுப்பினர் காசிதர்மம் துரை முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திமுக  வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன், கலைஞர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு மாதிரி கையேடுகள் வழங்கி  சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார்  தொகுத்து வழங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.  இதில் திமுக செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர், பேரூர் செயலாளர்கள் வெள்ளத்துரை, மாரியப்பன், உதயநிதி நற்பணி மன்ற மாவட்டத்தலைவர் ஈஸ்வரன், ஒன்றியச்
செயலாளர் காளிராஜ் பாண்டியன், கடையநல்லூர் அரபாவகாப், தில்லை பேச்சிமுத்து, புதுக்குடி முன்னாள் ஊராட்சி திமுக செயலாளர் ராஜா, மாணவர் அணி புதுக்குடி ஊராட்சி செயலாளர் முத்துபாண்டி, செல்லத்துரை, கண்மணியாபுரம் சுபாஷ் சந்திர போஸ் பங்கேற்றனர்.

Tags : Mangalapuram Medical Training Center ,Artist Education Foundation ,
× RELATED கலைஞர் கல்வி அறக்கட்டளை சார்பில்...