×

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவிலில் மக்கள் கிராமசபை கூட்டம்

சங்கரன்கோவில், ஜன. 21:  தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவிலில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்தார். தனுஷ் குமார் எம்.பி., பூங்கோதை எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் சங்கர், முன்னாள் எஸ்பி குணசேகரன் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகரச் செயலாளர் சங்கரன் வரவேற்றார்.  இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்டோர் அதிமுக ஆட்சியில் நிலவும் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி மனுக்கள் அளித்தனர். அத்துடன் அதிமுக ஆட்சியை நிராகரிப்பதாகக் கூறினர். மனுக்களை பெற்றுக்கொண்டு பேசிய மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், உங்களின்  குறைகள் அனைத்தும் தலைவர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுசென்று விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் விவசாய அணி மாநில துணைஅமைப்பாளர் அப்துல்காதர், ஒன்றியச் செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், ராஜா தலைவர், சேர்மத்துரை, கடற்கரை,  கிறிஸ்டோபர், வெற்றிவிஜயன், அன்பழகன், சீனித்துரை, அழகுசுந்தரம், மாரிவண்ணமுத்து, குமார், செல்லதுரை, நகரச் செயலாளர்கள் சாதீர், ராஜகாந்த், பேரூர் செயலாளர்கள் பவுல்ராஜ்,  ஜெயபாலன், மந்திரம், ஜெகதீசன், நெல்சன், லட்சுமணன், பொன்சுந்தரம், மாரியப்பன், முத்தையா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புமணி கணேசன்,  ராஜதுரை, மாரிமுத்து,  

வக்கீல்கள் சண்முகையா,  கண்ணன், ராஜா,  ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் சோமசெல்வ பாண்டியன்,  சமுத்திரபாண்டி,  சுப்ரமணியன்,  ஜேசுராஜன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ரவிச்சந்திரன்,  இலக்கியஅணி அமைப்பாளர் சுப்பையா,  மகளிர் அணி அமைப்பாளர் செல்விசங்குகிருஷ்ணன்,  மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புனிதா அஜய் மகேஷ்குமார், வர்த்தக அணி அண்ணாவியப்பன், முனியசாமி, பத்மநாபன், விவசாயத் தொழிலாளர் அணி கோமதிநாயகம்,  மாணவர் அணி ரமேஷ்,  ஆதிதிராவிடர் அணி ஆனந்த், சங்கரநயினார், லாசர், யோசேப்பு,  விவசாயத் தொழிலாளர் அணி அஜய் மகேஷ்குமார், தலைமைக் கழக பேச்சாளர் மாரியப்பன்,  இளைஞர் அணி  பிரகாஷ், கார்த்திக்,  வக்கீல் பெரியதுரை, முத்துமணிகண்டன் மகளிர் அணி அண்ணாமலை,  சுப்புத்தாய் உள்ளிட்டேர் பங்கேற்றனர்.  இளைஞர் அணி நகரச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார். பாப்பாக்குடி:  முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தில் திமுக சார்பில்  நடந்த கூட்டத்திற்கு இளைஞர் அணி அமைப்பாளர் செல்லத்துரை தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பூங்கோதை, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Tags : meeting ,Grama Niladhari ,Sankarankoil ,Tenkasi South District DMK ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...