×

மாணவிகள் மாயம்

மதுரை, ஜன.21:  மதுரை செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்தவர் ஆண்டான் மகள் அகிலா(19). இவர் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி தையல் பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை எம்.ேக.புரத்தை சேர்ந்த சுரேஷ் மகள் மதுபாலா(19). இவர் பழங்கானத்தம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து ெஜய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை தெப்பக்குளம், செல்வபுரம் முதல் தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகள் சுருதிபிரியா(19). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் மதுரை விமான நிலையத்தில் தற்காலிக பணியில் சேர வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவரது தாயார் மறுத்துவிட்டாராம். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டிலிருந்த சுருதிபிரியா காணாமல் போய்விட்டார். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு