×

வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி

கழுகுமலை, ஜன. 21: கழுகுமலை அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த தொழிலாளி ரமேஷ்(40). இவர், திருவேங்கடத்துக்கு பைக்கில் சென்றார். இளையரசனேந்தல் - ராஜபாளையம் சாலையில் முக்கூட்டுமலை பகுதியில் பைக் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்தில் இறந்தார்.  கழுகுமலை போலீசார் ரமேஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை: ராமநாதபுரம் சவேரியார்  கோவில் தெருவைச் சேர்ந்த அருள் மகன் சங்கர்.ஆம்புலன்ஸில்  டிரைவரான இவர். நேற்று முன்தினம்  தூத்துக்குடியில்  இருந்து நோயாளியை நெல்லை மருத்துவமனையில் இறக்கிவிட்டு திரும்பி கொண்டிருந்தார்.  தெய்வச்செயல்புரம் அருகே  வரும்போது 40 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்டவர் சாலையை கடக்க  முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் மோதிசம்பவ இடத்திலேயே பலியானார். புதுக்கோட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teenagers ,car crash ,
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு